பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய புலவரேறு அரிமதி தென்னகனார் கூறியது போல ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்தச் சூழ்நிலையில் இந்நூல் எழுதப்பட்டதோ, அந்தச் சூழல் இன்னும் மாறவில்லை. அப்படியே இருக்கிறது. எனவே, இந்நூல் இன்றும் மிகப் பொருத்தமானதாகப்படுகிறது. பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் நூல்களுக்கு எப்போதும் தமிழன்பர்களின் பேராதரவு இருக்கும். அது போல் ஆசிரியரின் மறைவுக்குப் பிறகு வரும் முதல் வெளியீடான இந்நூலையும் ஆதரிக்க வேண்டுகிறோம். நூலை அழகுற அச்சிட்ட கம்பன் மறுதோன்றி அச்சகத்தார்க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்,
புதுச்சேரி.

வேங்கடநகர்,
புதுச்சேரி - 11.
14.4.1998


காணிக்கை
பேராசிரியர் முனைவர்
சுந்தர சண்முகனார் அவர்கட்குப்
பல பட்டங்களும் விருதுகளும்
வழங்கிய பல்கலைக்கழகங்களுக்கும்
நடுவண், தமிழக, புதுவை அரசுகளுக்கும்
சான்றோர் பெருமக்களுக்கும்
இந்நூல் காணிக்கை