பக்கம்:தனி வீடு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை (1)

வேலாயுதத்தால் குரனையும், கிரெளஞ்சமாகிய குவட்டையும் முருகன் குத்திய திருவிளையாடல் அருணகிரி நாதருக்கு மீண்டும் நினைவு வருகிறது. சென்ற பாட்டில் அந்த விளையாட்டை கினேங்தவர். அடுத்த பாட்டிலும் அதனைப் பாடுகிருர், குரனேயும் கிரெளஞ்ச மலையையும் வேலில்ை அழித்த முருகப்பெருமானுடைய் தொண்டர் களேச் சார்ந்தால்தான் நமக்குக் கதி உண்டு என்ற கருத்தை வைத்துப் பாடுகிருர். தம்முடைய நெஞ்சைப் பார்த்து, பாவி கெடு நெஞ்சமே!' என்று விளிக்கிரு.ர். அவர் சொன்னதை நாம் ஒவ்வொருவரும் சொல்லி நம் முடைய நெஞ்சுக்கு அறிவுறுத்த வேண்டும்.

செல்வமும் வாழ்வும்

மனிதன் எல்லாப் பொருளையும் மதிப்பது இல்லை. பெரும்பாலான மக்கள் மதிப்பது பெர்ருட்செல்வம் ஒன்றைத்தான். ஆனல் இறைவனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவன் திருவருளுக்காக ஏங்கி நிற்ப வர்கள் மதிப்பதோ அருட்செல்வம். நாம் நம்முடைய புறக் கண்ணேக் கொண்டு பார்த்து அந்தக் காட்சியை மதிக்கிறவர்கள். இந்தக் கண் ஒரு குறிப்பிட்ட எல்லைக் குள் அடங்கித்தான் பார்க்கும். காலத்திற்கும் இடத்திற். கும் கட்டுப்பட்டிருக்கும் நாம் அந்த எல்லைக்குள் அடங்: கினவற்றையே பார்க்க முடியும். இப்போது சோறு: வேண்டும்; நாளேக்குச் சோற்றுக்குப் பணம் வேண்டும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/122&oldid=575933" இலிருந்து மீள்விக்கப்பட்டது