பக்கம்:தனி வீடு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 1 6 தனி வீடு

தது என்று அவர் பாடுகிருர். எவ்வளவு ஆயிரம் நூல் களைப் படித்த புலவனைலும் இவ்வுலகம் அவனே மதிக் காது. நல்ல மேலாடை அணியாமல் வந்த புலவனே மதிப் பவர் அதிகமாக இருக்க மாட்டார்கள்' என்கிரு.ர்.

பெரிய பிரசங்கிகள் கூடத் துப்பட்டா, சால்வை முதலியன போர்த்துக் கொண்டு வருவதற்குக் காரணம், சபையினர் தம்மை மதிக்கவேண்டும் என்பதுதான். அவர்கள் தம்முடைய மதிப்பைப் பேச்சில்ை புலப்படுத்த லாம். அதற்கு முன்பு அவர்கள் சபையில் போக வேண்டும் அல்லவா? அதற்குச் சால்வை முதலியன விளம்பரமாக உதவுகின்றன. • -

மேலாடை இன்றிச் சபைபுகுந் தால் இந்த மேதினியோர்

நூலாயிரம்படித் தாலும் எண் ணர்'. -

இப்படி அந்தப் புலவர் சொல்லிவிட்டு இதற்கு உதாரணம் சொல்கிருர், இது இந்த உலகத்தில் மாத்திரம் கடப்பது அல்ல. தேவலோகச் செய்தியும் அப்படித்தான் திருப் பாற்கடல் என்ன செய்தது தெரியுமா?

'நுவல் பாற்கடலோ, மாலோன் அணிந்தபொன்

ைைடயைக் கண்டு மகளைத் தந்தே.' பட்டுப் பீதாம்பரங்களே அணிந்து கொண்டு வந்தார் திருமால். அவரது ஆடம்பரத்தைக் கண்டு மயங்கி அவருக் குத் தான் பெற்ற திருமகளேத் தந்ததாம். திருமாலைப் பாற்கடல் மருமகன் ஆக்கிக்கொண்டது. ஆனல் திருப் பாற்கடலைக் கடையும்போது சிவபெருமானும் வந்தான். அந்தப் பரமேசுவரன் எதைப் பெற்ருன் தெரியுமா? பாற் கடல் தன்னிடத்தில் உண்டான ஆலகால விடத்தைக் கொடுத்தது. திருமாலுக்குத் தன் மகளையும் சிவபெரு மாலுக்கு நஞ்சையும் கொடுத்ததற்குக் காரணம் என்ன? சிவபெருமான் அந்தச் சபைக்கு வரும்போது பட்டுப் பீதாம் பரம் உடுத்துக்கொண்டு வரவில்லே. பொன்னடை வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/126&oldid=575937" இலிருந்து மீள்விக்கப்பட்டது