பக்கம்:தனி வீடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 31

பத்தை அடையலாம். அன்பு நெறியில் நடக்கத் தொடங் கில்ை அது முதலில் வழியாக இருந்து பின்பு அதுவே இன்பமயமாக முடியும்.

  • அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே'

என்பது திருமூலர் வாக்கு. ஓர் ஏணி இருக்கிறது. அதையே மடித்துக் கட்டில் ஆக்கிவிடலாம் என்ருல் அதைக்கொண்டு மாடியின் மீது ஏறலாம். ஏறி, அந்த ஏணியையே எடுத்துக் கட்டிலாகவும் மடித்துப் போட்டுக் கொண்டு படுக்கலாம். அத்தகையது அன்பு நெறி.

(2)

அருணகிரிநாதப் பெருமான் இந்த இரண்டு வகை விளையாட்டையும் சொல்கிரு.ர். ஒன்றை மாயை விஅள யாட்டு என்றும், மற்ருென்றை ஞான விளையாட்டு என் றும் சொல்கிருர். விநோதம் என்ற சொல் விளையாட்டைக் குறிப்பது. ஞான விநோதம், மாயா விநோதம் என்று இரண்டையும் அவர் அலங்காரமாகப் பாட்டில் சொல் கிருர். நாம் இப்போது மாயா விநோதத்தில் ஈடுபட்டிருக் கிருேம்; ஞான விநோதத்தில் ஈடுபட வேண்டும்.

மாயா விநோதம்

மாயா விநோதத்திற்குக் காரணமாக இருப்பது மனம். அதனல் வருகின்ற விளைவு துக்கம். உலகத்தில் இமக்குத் துயரங்கள் பல காரணங்களால் வருகின்றன. அவற்றுள் தலைமையாய் உள்ளவை மூன்று என்று சொல்லலாம். நாம் நம்முடைய உறவினர் எவரையேனும் இழந்துவிட்டால் துயர் அடைகிருேம். நமக்குரிய

பொருளை இழந்துவிட்டால் துன்புறுகிருேம். நோய் வந்

தால் இன்னல் அடைகிருேம். உலக வாழ்க்கையில் இந்த மூன்று வகையாலும் துக்கம் உண்டாகிறது. ஆனல் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/41&oldid=575852" இலிருந்து மீள்விக்கப்பட்டது