பக்கம்:தனி வீடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தனி வீடு

படமும் ஆளும்

இன்னும் இதைச் சற்றுத் தெளிவாகப் பார்க்கலாம். நம்முடைய வீட்டில் ஒரு படம் மாட்டி இருக்கிருர்கள். நம்முடைய உறவினர் அவர் மிகவும் நல்லவர் என்று தாய் தந்தையர்கள் சொல்கிருர்கள். நாம் அவரைப் பார்த்ததில்லை. அவர் எங்கே இருக்கிருர் என்று கேட் கிருேம். அவர் எங்கோ பம்பாய்க்குப் போனர். அங்கே தங்கிவிட்டார். அவரை நான் கண்டு பல காலம் ஆயிற்றே!' என்று தந்தையார் சொல்கிருர் நாம் தினங் தோறும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிருேம். ஒரு சமயத்தில் பம்பாய்க்குப் போகிருேம். போகிறபோது அந்தப் படத்திலுள்ள மனிதரைக் காண் கிற வாய்ப்புக் கிடைக்கிறது. கண்டவுடன் நம்முடைய வீட்டுப் படம் நினைவுக்கு வருகிறது. அடையாளம் கண்டு கொள்கிருேம். உடனே அவரோடு கலந்து பேசி அவரு டைய அன்புக்கும் பாத்திரமாகிருேம். ஊருக்கு வந்த வுடன் நம்முடைய தாய் தந்தையர்களிடம், இதோ இந்த அறையில் இருக்கிருரே, அவரை நான் பம்பாயில் பார்த்' தேன்' என்று சொல்கிருேம். இந்தப்படத்தில் உள்ள வரை நான் பார்த்தேன்' என்று சொன்னல் இந்தப் படத் திலேயே கை காலுடன் இருக்கிருர் என்று பொருள் அல்ல. இங்கே வெறும் அடையாள மாத்திரமாகக் கண்ட திருவுருவத்தை அங்கே அநுபவிக்கும் வண்ணம் பார்த்த தாகக் கொள்ள வேண்டும். - . . . .

அதுபோலவே நாம் நாள்தோறும் கோயிலில் காண் கின்ற விக்கிரகம் பின்னலே நாம் அநுபவிக்கின்ற அநுபவத்திற்கு அடையாளம். இந்த அடையாளத்தை உள்ளத்தடத்தில் கட்டு அன்புநீர் பாய்ச்சி வளர்க்கின்ற அடியார்கள் அந்தப் பெருமான நீேரில் கண்டு இன்பத்தை து கரலாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/82&oldid=575893" இலிருந்து மீள்விக்கப்பட்டது