பக்கம்:தனி வீடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும்

1

ாேம் திருக்கோயிலில் காணும் இறைவனுடைய அற்புதமான விக்கிரகத்தை வித்தாக மனத்தில் பதித்துத் தியானம் செய்து, பக்தி ஏற ஏற அந்தத் திருவுருவமே ஆனந்தக் கடலில் அமுதம் போலத் தோற்றும் என்பதைப் போன பாட்டில் அருணகிரிநாதர் சொன்னர். மறுபடியும் அடுத்த பாட்டில் எம்பெருமான் திருவருளேப் பெறுவதற்கு எளிய வழி ஒன்றைச் சொல்கிருர்,

நல்ல மலர்களில் மணமும் தேனும் இருக்கும்; மென் மையும் இருக்கும். அந்த மலர் வாடி வதங்கி மாய்ந்து போனலும், மணம் அதனோடு போய்விட்டாலும் அதில் உள்ள தேனே நாம் பெறலாம், அந்தத் தே8ன நமக்காகச் சேமித்து வைக்கிறது வண்டு. வண்டு மலர்களில் உள்ள தேனைச் சேமித்துத் தானும் உண்டு, பிறருக்கும் பயன் படச் செய்யும் இயல்பு உடையது. - - -

வண்டுகளின் &\lto

வண்டுகள் என்று சொன்னவுடன் நமக்குத் தேனத் தொகுக்கும் வண்டு நினைவுக்கு வருகிறது. உலகில் பல வகையான வண்டுகள் உண்டு. இழி பொருள்களே உருட்டுகிற வண்டுகளேயும் நாம் பார்த்திருக்கிருேம்: தேனை உண்ணும் வண்டுகளிலும் பலவகை உண்டு. சிறு சிறு மலர்களிலிருந்து தேனேச் சேகரித்து மிகத் தாழ்ந்த இடத்தில் கூடு கட்டி வைக்கும் வண்டுகள் ஒரு வகை. தாமரை முதலிய மலர்களிலிருந்து தேனைத் தொகுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/95&oldid=575906" இலிருந்து மீள்விக்கப்பட்டது