பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழக வரலாறு - கரிகாற் பெருவளத்தான்

தேவஸ்தான உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டார். அவர் இடத்திற்குக் காவேரிப்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் பணி புரிந்திருந்த திரு. ஒளவை.சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வந்து சேர்ந்தார். தென் ஆர்க்காடு மாவட்டம் மயிலத்துக்கு மேற்கில் பத்து கி.மீ- தொலை வில் உள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில், அவ்வூர்க் கணக்கு எழுதி வந்த திரு. சுந்தரம் பிள்ளை அவர்களின் மகனாகப் பிறந்தமையால் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை என அழைக்கப்பட்டவர்.

மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள் எங்கே, இவர் எங்கே எனச் சில நாள் இவரை மதிக்காமலே இருந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒளவை அவர்களின் பாடம் நடத்தும் முறை புதுமையானது. அன்று நடத்த வேண்டிய பாடத்திற்கான குறிப்புகளை முன் பாகவே தேர்வு கொண்டல்லது பாடம் எடுக்க மாட்டார்; பாக்களை இசையோடு பாடுவார்; சொல் பிரித்து பொருள் விளங்கப் பாடுவார்; புதிய பாடம் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் பழைய பாடத்தை மாணவர் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள சில பல கேள்விகளைக் கேட்பார். அம்முறையில் ஒரு நாள் அரிச்சந்திர புராணத்தில் வரும் "அவமே புறம் அறைந்தமை" என்ற தொடரில் வரும் "அறைந்தமை" என்ற சொல்லுக்குச் சொல்லிலக்க ணம் கூறுமாறு கேட்டார். அதுவரை இலக்கணம் என்றால், இலக்கணத்திற்குப் பாடமாக வைத்திருக்கும் நூலில் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களை ஒப்பிப்பதோடு சரி; அத னால் சொல்லிலக்கணம் என்பது என்ன எனப் புரியாமல். விழித்தோம். அவர் "இடவழுவமைதி தனித்தன்மைப் பன்மை" என்பதுதான் இதன் சொல்லிலக்கணம் என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, இடமாவது, வழுவாவது அமைதியாவது, தனித்தன்மைப் பன்மையாவது,