பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

"செழியன்
ஆல்ங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேல்"

என்ற ஆலம்பேரி சாத்தனார் பாட்டும்24, செழியன் என்ற அவன் இயற்பெயர், ஆலங்கானம் என்ற அவன் வென்ற களம் ஆகிய இவ்விரண்டை மட்டும் உணரத்தான் துணை புரிகின்றனவேயல்லாது, அவன் இளையன் என்பதை உணரத் துணை புரியவில்லை.

அதுபோலவே,

"தமிழ் தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேல் செழிய
எழுவர் நல்லலம் கடந்தோய்”

என்ற வடபுலவியனார் பாட்டும்25, செழியன் என்ற அவன் பெயர். ஆலங்கானம் என்ற போர்க்களம், ஆகிய இவ்விரு விளக்கங்களோடு, அவன் பகைவர் எழுவர் என மேலும் ஒரு விளக்கத்தை மட்டும்தான் தருகின்றதே அல்லது, அவன், இளையன், தாம் படையாலும் எண்ணாலும் பெரியவர் என்ற செருக்கே ஆலங்கானப் போருக்குக் காரணம் ஆயிற்று என்பதை உணர்த்த வில்லை.

"செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன் தலை வந்த
புனை கழல் எழுவர்"26

"கிண் கிணி களைந்தகால், ஒண்கழல் தொட்டு.
பால் விட்டு அயினியும் இன்று அயின்றனன்"27