பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழச்சி
இயல் 1
காதலர் சந்திப்பு

வானிடைத் தோன்றும் செம்மை
வளம்பெறப் பரிதி காலை
தானொரு ஓவி யன்போல்
பொன்னிறம் தடவும் ; ஆங்கே
ஏனெனை மறந்தாய் என்றே
எதிர்நின்று தடுக்கும் மேகம் ;
கான்மலர் இவற்றைக் கண்டு
கைகொட்டி நகைத்து நிற்கும் !

1

மதகிடை நீர்பு குந்து
வாய்க்காலின் கரையை மோதும் ;
ஒதுங்கியே நாணி நிற்கும்
மங்கையை ஒப்ப நாட்பூ;
வெதும்பிடும் அல்லி நோக்கி,
விண்நோக்கி மூரல் பூக்கும்;
இதைப்பார்த்தாள் நீர்மொண் டேகத்
தமிழச்சி மறந்தே போனாள்!

2