பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"உள்ளத்தே நினைப்பார்; சொல்வார்
நம்நாட்டார்; ஊறு செய்யும்
பள்ளத்தை தூர்க்க ஏனோ
பயந்தோடி மறைவார்; மூட
வெள்ளத்தை மீன்போல் பெண்கள்
எதிர்த்திடில் அடிமை எல்லாம்
தள்ளுண்டு போகும்; தூய
தமிழ்ப்பண்பு தழைக்கும் அன்றோ.3O

"உன்னரும் சுற்றத் தார்கள்
ஒன்றாகச் சேர்ந்து சாதி
தன்னிலே விலக்கி விட்டால்,
தமிழகம் உள்ளங் கையோ?
தன்னரும் கற்பைக் காத்தல்
தமிழ்ப்பெண்கள் கடமை யாகும்;
என்னடி கலங்கு கின்றாய்?
எதிர்த்திட எடடீ வாளை!".31


12