பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மண்ணினில் புழுதி யாக
வாழ்கின்றார் உங்கள் மக்கள் ;
கண்கொண்டு 'பார்க்கின் றீர்கள் ;
கழுவிய காலம் உண்டா?
எண்ணெயைத் தடவி உங்கள்
தலைவாரி முடித்த துண்டா ?
கண்பெற்றும் குருட ராகி
வாழ்வதைக் கடிய வேண்டும்!40

"ஒதியனின் நீழல் தன்னில்
ஒருபள்ளிக் கூடம் கட்டி
முதியவர் படிக்க வேண்டும்
முன்னவர் கதைக ளெல்லாம் ;
முதியவர் தங்க ளின்கான்
முளைகளைக் கல்வி கற்க
அதிகாலை அனுப்ப வேண்டும் ;
அச்சத்தை மாற்ற வேண்டும்!41

"உங்களுக் குள்ளே கட்டாய்
ஒவ்வொரு வீட்டுக் காகப்
பங்குகள் போட வேண்டும் ;
பழுதுகள் பார்க்க வேண்டும் ;
திங்களில் சேரி யுள்ளோர்
யாவரும் ஒருநாள் கூடி
இங்குள்ள குறையை நீக்க
இயன்றதைச் செய்ய வேண்டும்!42

16