பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழிலோவியம்
--சில கருத்துக்கள்--

'எழிலோவியப் பாக்கள் நிழலும் பொழிலில் வழிதேன் பொழியும் பூக்கள். அவை இனிமையும் எழிலும் இயைந்து மிளிருங் கவிகள். இருந்து புலவர் வருந்திப் புனையும் பாட்டுப் போல, அடுக்கும் இன்சொற்களும் தொடுக்கும் எண்ணமும் புனைந்து வனைந்த செய்யுட்கள் அல்ல. அவற்றின் தன்மை இறுகி உறையும் தன்மையும் அன்று; உருகி ஒழுகும் நீர்மையும் அன்று; இயற்கையில் எடுத்த படங்களின் பண்பாம்! தங்கள் பாக்களுக்கு 'எழிலோவியம்’ என்பது பொருந்தும் இயற்பெயராகும் என்பதில் எவர்க்கும் யாதொரு ஐயமும் இராது.”

-டாக்டர், பேராசிரியர், நாவலர், கணக்காயர், இளசை

கிழார்

ச. சோ. பாரதி.

"கவிதைகள் என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டன. இவ்வளவு சிறந்த புலமை தங்கள் உள்ளத்தில் இதுகாறும் எவ்வாறு மறைந்து கிடந்தது என்று எண்ணி வியந்தேன். 'நிலா'விலுள்ள சொற்கள் பல என்னுளத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன. தங்கள் தொண்டுக்கு நன்றி. அடுத்து ஒரு கவிதைக் கூட்டம் அச்சேறி வர வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.”
-கி.ஆ.பெ.விசுவநாதம்.
மலர் நிலையம்
133, பிராட்வே,::சென்னை-1.