இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'எழிலோவியப் பாக்கள் நிழலும் பொழிலில் வழிதேன் பொழியும் பூக்கள். அவை இனிமையும் எழிலும் இயைந்து மிளிருங் கவிகள். இருந்து புலவர் வருந்திப் புனையும் பாட்டுப் போல, அடுக்கும் இன்சொற்களும் தொடுக்கும் எண்ணமும் புனைந்து வனைந்த செய்யுட்கள் அல்ல. அவற்றின் தன்மை இறுகி உறையும் தன்மையும் அன்று; உருகி ஒழுகும் நீர்மையும் அன்று; இயற்கையில் எடுத்த படங்களின் பண்பாம்! தங்கள் பாக்களுக்கு 'எழிலோவியம்’ என்பது பொருந்தும் இயற்பெயராகும் என்பதில் எவர்க்கும் யாதொரு ஐயமும் இராது.”
கிழார்
ச. சோ. பாரதி.
-கி.ஆ.பெ.விசுவநாதம்.