பக்கம்:தமிழஞ்சலி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி எவ்வளவுதான் உயரமான நிலையிலே ஒருவன் இருந்தாலும் அவன் கடலைப் போன்ற ஆழ்ந்த அறிவாளர்களிடத்தில் அடிவணங்கித்தான் ஆக வேண்டும் என்பது - அடிவானத்தின் தத்துவமாகும். கரையிலிருப்பவர்கள், தங்களுடைய செங்கோலை வைத்துக்கொண்டு, அடிவானுக்கும் ஆழிக்கும், ஏற்பட்டத் தொடர்பை அலட்சியமாக நினைக்கும்பொழுது - அடுக்கடுக்காக வருகின்ற அலைப் புரட்சியை , சாதாரணமாக நினைக்கும் பொழுது - எத்தனையோ கோல்கள், அந்த அகண்ட அறிவுக் கடலின் ஆழத்தில் விழுந்து, முழுகிவிட்டிருப்பதையும் காண முடிகிறது. எதேச்சாதிகாரிகள், தங்கள் ஆணவக் கோலைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் - கிடைக்கவில்லை. நான் கற்பனை செய்யவில்லை. இப்போது கடலின் அடிபாகத்தில் இருக்கிறேன். அங்கே அலைகள் இல்லை. நீரின் அமைதி - அழுத்தமானப் பாறைகளைப் போல, மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது. நான் கடலின் உள்ளிருந்து, வானோக்கி, அண்ணாந் துப் பார்த்தேன். ஒரே ஒளிமயம், நீர் மட்டத்தில் இருந் தது. இப்போது நான் வியப்படைகிறேன். ஒரு முழுநிலவு. எனது காலடியில் இருந்தது! நான் வெளி உலகத்தில் பார்த்த நிலவை விட இந்த நிலவு ஒழுங்காக வரையப்பட்டிருந்தது. 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/109&oldid=863450" இலிருந்து மீள்விக்கப்பட்டது