பக்கம்:தமிழஞ்சலி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி உறிஞ்சி வைத்துக்கொண்டிருக்கிறார். காரணம், அவரும் அந்தக் குடும்பத்திலே பிறந்த ஒருவரல்லவா? பல கோடி மக்களின் நலனுக்காகப் பாடுபட உலகில் தோன்றிய எந்தத் தலைவனும், துன்பச் சூட்டைத் தான் உறிஞ்சி, எப்படி - கடல் செடி, தனது குளுமையான இலைகளை மீன் குஞ்சுகளுக்கு இரையாக்கி விடுகிறதோ, அப்படி தன்னைப் பொதுமக்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றான். கடல் செடி, நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும் - தன்னையே மீனுக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதற்கும் உருவானதைப் போல, அறிஞர் அண்ணா அவர்கள், தன்னைப் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தும் - அவர்களது துன்ப வேக்காட்டைத் தானுறிஞ்சிக் கொண்டும் வாழ்கிறார். கடலடியில் இருந்த எனது கண்கள், கொஞ்சம் தொலைவில் தங்க முலாம் பூசியத் தகடாக மின்னிக் கொண்டிருந்த ஒரு பனி மலையின் மீது, பதிந்தன. கடலின் மேற்பரப்பில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் திங்கள் - அந்தப் பனிமலை மீது தனது கவனத்தை கதிரை செலுத்திய காரணத்தால் - அந்தப் பனிமலை, தங்கக் குவியலாக எனக்குத் தெரிந்தது. அதனின் உச்சி, கடலின் மேற்பரப்பில் இருக்கிறது. அடிவாரத்தில்தான், நான் இருக்கிறேன். அந்த மலை -உலகம் தோன்றியதற்குப் பிறகு - பல கோடி நூற்றாண்டு இடையறாது பெய்த மழையின் 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/116&oldid=863458" இலிருந்து மீள்விக்கப்பட்டது