பக்கம்:தமிழஞ்சலி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி தன்னடக்கம் நான் மிக மிகச் சாமானியன், ஆயினும், திரியும் எண்ணெயும் முறைப்படி இருந்திடின், இருட்டினை விரட்டிடும் ஒளியினை உள் ளங்கை அளவுள்ள அகல் விளக்கும் தருகிறது அல்லவா? அதுபோல, என்னை ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தை நடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்கத் தக்க நிலைக்கு - நீங்கள், உங்கள் அன்பைப் பெய்து ஆளாக்கி விட்டிருக்கிறீர்கள். நான், மிக மிகக் கூச்சப்படுபவன் - உங் களுடைய உற்சாகமூட்டும்தன்மையும், உறுதி தரும் பேச்சும், செயலும், உடனிருந்து பணியாற்றும் திறனும், சேர்ந்துதான், என்னை இந்த அளவுக்குப் பொதுப்பணித் துறையிலே ஈடுபட வைத்தது. - அன்னா ། المسر

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/121&oldid=863464" இலிருந்து மீள்விக்கப்பட்டது