பக்கம்:தமிழஞ்சலி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மாசறு உமது முகத்திற்கு, இதற்குமேல் உவமை கூற முடியவில்லையே அண்ணா! ஆட்சிக் கோணலை நிமிர்த்திட முழக்கமிட்டீர் கடற்கரையிலே! காசறு கொள்கைக்கு காவலராய் நின்றீர்! மேதகு மேன்மையால் மிளிர்கின்ற தங்களது அறிவுரைக்கு, கோடி வணக்கங்கள் செய்தோம்! புதிருக்குப் புதிராகின்ற புலவோய்! எதிருக்கு எதிராய் உம்மை எதிர்க்கின்ற சக்தி ஏது? நாட்டிலே நீங்கள் ஒரு பிரச்னையாகி நின்றீர்! ஆட்சி பிரச்னைக்கு நீங்கள் ஒர் ஊழி! வரலாற்றில் நீங்கள் ஒரு பொன்னேடு! இலக்கியத்தில் நீங்கள் ஒரு காவியம்! நேற்று, நீங்கள் இல்லாததால் கலங்குகிறது! 'நாளை உங்களுக்காக ஏங்கி நிற்கிறது! அறிஞரே! மெரீனா கடற்கரையிலே நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டோம்! உடல் புல்லரித்தது! உவகைக் கலமேறினோம்! வங்கக் கடலிலே உலவி வலம் வந்தோம்! தமிழாய்த் திகழ்ந்து, திருக்குறளாய் சிரித்தீர்கள்! பூகோளமாய் விளங்கி, முல்லை நிலமாய் நகைத்தீர்கள்! கணிதமாயிருந்து, வகுப்பன வகுத்து, கழிப்பன கழித்தீர்கள்!

  1. 24
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/134&oldid=863478" இலிருந்து மீள்விக்கப்பட்டது