பக்கம்:தமிழஞ்சலி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது, அவர்கள் காதல் களியாட்டத்திலிருந்தாலும் சித்து, கடமை வீரர்களாக மாற்றும் சக்தியை, ஊட்டி விட்டாய் வாழ்க நின் செயல்! வளர்க பொதிகைபோல்! o அவர்கள் பருவயிரத் தோள்கள் மீதும், பொங்கு மணி மார்பகத்தின் மீதும், நீ தவழ்ந்து, உலுக்கிப், புறநானுசற்று வீரர்களாக்கி விட்டாய். வாலிபர்கட்கும் உன்மீது வரையிலா பற்றை உண்டு உண்ணிவிட்டாய். மலரை தாடிவரும் வண்டினத்தைப்போல - அவர்கள் நாடுகிறார்கள்: பல அருவிகள், எவ்வாறு ஒன்று திரண்டு நதியில் கூடுகின்றனவோ, அதைப்போல! வாலிடர்கள் என்ற அருவிகள், காலமெனும் நதியோடு கலக்க ஓடிவருகின்றபோது, தென்றலே, அந்தக் கால யினையே நான் ஆட்கொண்டுவிட்டேன்; நீங்கள் ஏன் அங்கு போய் கூடுகிறீர்கள் என்று கூறி: அந்த அருவிகள் தோள் மீதே உந்தி உந்தி ஆனந்தத் தாண்டவம் புரிகிறாய்ப் போலும். அருவிகளின் தோள்களையே ஆட்கொண்டு, வீரத்தை ஊட்டிவிட்டத் தென்றலே, நீ வாழ்க! உன்னை எப்படித்தான் புகழ்வேன்! வார்த்தையிலையே வேறு கூற சிறுகாலே இத்தகையப் பண்புபெற்ற நீ, கம்மா இருக்கிறாயா என்றால் - அதுவுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/146&oldid=863491" இலிருந்து மீள்விக்கப்பட்டது