பக்கம்:தமிழஞ்சலி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அப்படிப்பட்ட கால நதியையும், நீ தழுவிக் கொண்டாயே! என்னே உன் சக்தி வீரம் ஆற்றல்; காலத்தையும் உன் பக்கம் இழுக்கும் சக்தி உனக்குண்டு என்பதை நிரூபிக்கத்தானே, காலத்தைப் பல பிரிவாக வகுத்துக் குறிப்பிட்ட ஒரு காலமான - வசந்தத்தின் போது மட்டும்; நீ வருகிறாய்! போகிறாய்! இத்தகைய சக்தி படைத்த என் அருமைத் தென்றலே! உன்னை உளமாற நான் போற்றுகின்றேன். உன் வீரம் நம் தமிழ் இனத்திற்கும் தேவை! என்பதால்! வாழ்க நீ, தென்றலே வாழ்க நீ, வையம் உள்ளளவும்: தென்றலே! இவ்வாறு நீ ஓடி வரும்போது, வழியில்: அருவியின் தோளிலே உந்தி உந்தித் தாண்டவமாடுகிறாய். அந்த அருவிகள் யார் என்று உனக்கும் தெரியும்! துடிப்பான உள்ளம் படைத்த தமிழகத்து வாலிபர்கள் தான், என்பதை நானும் அறிவேன். வாலிபப் பருவத்தின் வனப்பையும் - வலிமையையும், நீ நன்றாக உணர்ந்திருக்கிறாய். இமைப் பொழுதில் எதையும் சாதிக்கும் திறன் பெற்றவர்கள் வாலிபர்கள். அதைப் போலவே எதையும் அழிக்கவும் வல்லமை பெற்றவர்கள். நீ வரும்போது வாலிபர்கட்கு காதல் உணர்வை ஊட்டி ஒன்றுபடுத்துவாய்! 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/145&oldid=863490" இலிருந்து மீள்விக்கப்பட்டது