பக்கம்:தமிழஞ்சலி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அந்தி நேரத்தில், கண் சிவந்த வீரனைப்போல் காட்சி தருகிறாய்! உனக்கிருக்கும் பெருந்தன்மையான பண்பால், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகின்றாய்! உன்னுடைய தயாள குணத்தை விவரிக்க, பைபிளின் கர்த்தா ஏசு பெருமான் வரவேண்டும்! திருக்குரானின் மூலவர் நபிகள் நாயகம் வரவேண்டும். தம்மபதத்தின் தலைவன் புத்தர் பெருமான் வருகை தரவேண்டும். இருண்ட காட்டிலே நீ எட்டிப் பார்க்கும்போது, தாயைக் கண்ட சேயைப் போல, அரும்புகள் கூச்சமற்றுச் சிரிக்கின்றன! அறிவுக் காட்டில் நீ நுழையும்போது, உனக்கு வழிவிட சந்தன மரங்கள் தயாராக இருக்கின்றன. கதிரவனே! நீ ஒரு நகரத்தின் தலைவனா? ஒரு தேசத்தின் அரசனா? இந்தப் பூபாகத்தின் பெரும் சக்தியா? அண்டத்தின் சுழற்சிக்கு மூலமா? உரிமையின் விளக்கே! நீ புறப்பட்ட நேரம் சரியான காலம்தான். அதனால்தான் என்னைப் போலிருக்கும் புழுக்கள் - பட்டாம் பூச்சிகளாய்ப் பறக்கின்றன. நீ, கிழக்கில் வந்தவன் மட்டுமல்ல; மக்களின் மன வாழ்விலே வந்தவன்!

  1. 50
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/160&oldid=863507" இலிருந்து மீள்விக்கப்பட்டது