பக்கம்:தமிழஞ்சலி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அண்ணா ஒரு நிலா! வசந்த காலத்தின் வரவை நம்பி, முளைகள் ஏற்கனவே தளிர்விட ஆரம்பித்தன. குருத்துவிட்டுக் கிளம்பிய கனிகள் - சிறு குழந்தைகளின் உதடுகளைப்போல், எந்நேரமும் திறந்த வண்ணமே இருந்தன. பச்சைக் கிளிகளின் குஞ்சுகள் - கிளைகளில் குந்தியிருப்பதைப் போலத் - தளிர்கள் இருந்தன. உதயசூரியன் மதிய ஒளியனான பிறகு, உழைத்துக் களைத்த மகனுக்கு ஆறுதல்கூறி அன்பு காட்டும் தாய்போல - அந்தி, மாலை நேரத்தில் சூரியனை அழைத்தது. } 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/175&oldid=863523" இலிருந்து மீள்விக்கப்பட்டது