பக்கம்:தமிழஞ்சலி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி என் ஜீவயாழ், உன்னைப் பாடிக் கொண்டே செல் கின்றது! அந்தப் பாட்டு....! உன் இலட்சியத்தின் மீது கட்டப்பட்டது! - விடுமுறை நாட்களில் ஒய்வு பெற வந்த சிறுவர்கள், என் அழகைப் பார்த்துச் சிரிக்கின்றனர்! ஒரு தீராத விளையாட்டுப் பையன், தன் காகிதக் கப்பலை - என் மீது மோதினான்: நான், கப்பலோடு சேர்ந்த வண்ணமாய் சேகமாகச் செல்கின்றேன். சிறுவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி! அதே நேரத்தில் எனக்கு எத்தனை அதிர்ச்சி! அப்போது ஒரு கவிஞன் இருந்தால் அது தானே கவர்ச்சி! உன் அறிவின் ஆழம்போல, ஒர் ஆழமான இடத்தில் நான் மீண்டும் தலைக் குப்புற விழுந்தேன்! என்னுடன் வந்த காகிதக் கப்பலும் கவிழ்ந்தது! அதன் மீது எழுதப்பட்ட எழுத்துக்கள் - நீரால் கரைந்தன. ஒரு காலத்தில், இந்த நாட்டின் மானம் எழுதப்பட்ட பத்திரமாக அது இருந்தது. அதை எடுத்துச் சில சிறுவர்கள் கப்பல் செய்து விட்டுவிட்டனர். அந்த எழுத்துக்கள் நீரில் கரையும்போது, என் மானமும் கரைந்து கண்ணிர் பொங்க ஆரம்பித்தது.

  1. 80
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/190&oldid=863540" இலிருந்து மீள்விக்கப்பட்டது