பக்கம்:தமிழஞ்சலி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி உனது நாட்டுப் பற்றை, ஒருத்தி நாடகமாடினாள். உனது அரசியல், பண்பைப் பற்றி, ஒருவன் கவிதை யார்த்தான்! உனது உறவைப்பற்றி ஒருவன் உருகினான்! அன்பின் உருவாகி, ஆனந்தக் கண்ணிரைச் சொரிந்தான்! அந்த புகழ் நெரிசலில் - உன்னை எப்படியம்மா, நான் வெளியே வந்து பார்ப்பது? ஒரே மனத்திரள்: தேனடையில் மொய்த்துக் கொண்டிருக்கும் தேனிக்கள் போல, நானும் நெருங்கிக் கிடந்தேன். எப்படியாவது உன்னைப் பார்க்கவேண்டும் என்பதற் காகத் துணி துவைக்கும் தொழிலாளியின் கல்லருகே, வந்தேன். அப்போது நீ, வாய் திறந்தாய், கொட்டின முத்துக்கள்! சிதறின வைரங்கள்! எல்லாம் மரகதக் குப்பைகள்! மரகதக் குப்பைகள்!! ஒவ்வொரு கற்களும் - ஒவ்வொரு பொருள் வண்ணத்தைக் காட்டி ஒளிர்ந்தன! வந்தவன் ஒவ்வொருவனும், அந்த விலை மதிக்க முடியாத மணிகளை - மனக் கூடையில் - வாரிக்கொண்டு போனார்கள்! எஞ்சியிருப்பது ஒரே ஒரு முத்து. அந்த முத்தை நாடி நான், நெருங்க ஆரம்பித்தேன். அது என்னரு கிலேயே இருந்தது! 186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/196&oldid=863546" இலிருந்து மீள்விக்கப்பட்டது