பக்கம்:தமிழஞ்சலி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அப்போது அந்த தொடுவான் மட்டும், அவ்வளவு அழகாக இருந்திராவிட்டால், இந்த நினைவு கூட வந்திருக்காது. அண்ணா ஏழைகளின் வாழ்விலே இருக்கின்ற இன்பத்திற்காகவே, நிலத்தை நோக்கி விளைந்தவர். அப்போது ஏழைக் குப்பாயி போன்றவர்கள், பழங்காலச் சிந்தனையைத், தொடுவானால் திரும்பப் பெறுகின்றார்கள். தொடுவான் இல்லையென்றால், உலகத்தில் வாழும் கோழிக் குஞ்சுகளான மக்களுக்கு, வானம் போன்ற கூடை கிடைக்காது. எனக்குக் கவிதா நோக்கம் உண்டு - ஆனால் யாப்பைக் கடைந்தெடுத்து உண்டவன் அல்ல! வானத்தை, கோழிக் குஞ்சு கவிழ்க்கும் கூடை என்பதை விட, இப்படித்தான் கூற எனக்குத் தோன்று கிறது. தனியாக மிதக்கும் ஒரு நீர்க்குமிழியைப் போலத் தெரிகிறது. நிலம் ஊழிப் பெரும்வெள்ளத்திலே மிதக்கின்ற இலை. நான் குமிழிக்குள்ளே இருக்கின்ற ஜீவன்: இலையைத் தொட்டுக் கொண்டிருக்கின்ற உதடு தான் - நான் உள்ளே பார்க்கின்ற தொடுவானம். அண்ணாவும் இப்படித்தான்! | 9 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/201&oldid=863552" இலிருந்து மீள்விக்கப்பட்டது