பக்கம்:தமிழஞ்சலி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி உலக ஜீவன்களைப் போர்த்தியிருக்கும் நீர்க்குமிழி போன்றவர் - இல்லையென்றால் தொடுவான் போன் றவர். அவரின் வார்த்தைகளின் உட்பொருள் புரியாத போது, அவரைத் தொடுவான் என்று கூறுவதும் உண்டு. வெட்ட வெளியில் மனிதன் நடக்கிறான். வானம் அவன் அருகில் இருப்பதைப் போலத் தொடுவானால் உணருகிறான். அவன் அதனை நோக்கி, தமிழன் விட்ட அம்பு போல், காற்றினால் - உடலைக் கிழித்து ஓடுகிறான். வானம் அவன் கைக்குக் கிட்டவில்லை. சளைத்து - களைத்துக் கீழே விழுகிறான். வாழ்க்கையில் சலிப்பு - இந்த நேரத்தில், தொடுவான் தூரத்திலிருந்து சிரிக்கிறது. என்னை, நோக்கி வந்தவன் பயணம் செய்கிறான். என்னை, மாயை என்று நினைத்து உட்கார்ந்தவன், மேற்கொண்டு நகர முடியாமல் நிற்கிறான். அண்ணாவின் வாழ்க்கையில், இவை நமது மடியில் தெறித்து விழுந்த முத்துக்களாகும். தொடுவான், மேகத்திலே தலையை சீவிக் கொண்டி ருக்கிறது. அதன் கூந்தலிலே இருந்து நேற்று வைத்த முல்லை இதழ் - சிதறிக் கிழே விழுந்தது. 192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/202&oldid=863553" இலிருந்து மீள்விக்கப்பட்டது