பக்கம்:தமிழஞ்சலி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ான்.வி. கதை:ணி நீருக்கே வேறான ஊற்று நீ ஊற்றே முளைக்கின்ற கரு நீ! கருவுக்கே ஆதாரம் நீதான்! மெய்யகத்தே விளைகின்ற எண்ணக் கலவையெல்லாம் நெய்யகத்தே கொண்டிருக்கும் விளக்கொளியால் பார்த்து - பொய்யகற்றி, புதுமையேற்றி - வையகமே வாழ்த்துகின்ற நிலைக்குக் கொண்டு வந்த அண்னனே! வைதாலும் - உன் சிறப்பை மாற்றார் இழிமொழியால் கொய்தாலும் - எதிரிக்கும், இதயத்தின் தாள் திறந்து - உதவிக்கு அறிவூட்டும் உத்தமனே! பாடற்கு இனிய வாக்களிக்கும் தேக்குமரத்தோப்பருகில் - நீக்கமற நிழலாடும், நற்றமிழ்க் குரலெடுத்துப் பாடுகின்ற குயிலே! கூடற்கு இனிய குறிக்கோள்கள் குறித்து வைக்கும் - தேடற்கு இனிய சீரளிக்கும் செம்மலே: நீ, உன்னை ஊற்றி வளர்கின்ற இடத்தைக் கொள்கை எடுப்பென்டார். தேன் ஊற்றி வளர்க்கின்ற இடத்தைப் பூவென்பார். வான் ஊற்றி வளர்க்கின்ற ஒன்றை மழை என்பார். நான் ஊற்றிப் பாடுகின்ற இப்புகழைத் திக்கே, திசையே, முன்னே, பின்னே, நடுவே, அண்டத்தின் 205

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/215&oldid=863567" இலிருந்து மீள்விக்கப்பட்டது