பக்கம்:தமிழஞ்சலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மண்ணுக்கும் எனக்கும் நீங்காத தொடர்பு. எனது தலை பாரமாக இல்லை - அதனால் எனக்கு எப்போதும் மண்டை உடைவதில்லை. கர்வியும் என்னை நீர் என்று, மரியாதையோடுதான் கூறுகிறான். காரணம் தெரியுமா? அவன் பிணத்தைக் கடைசியில் கழுவுகிறவன் நான். கேள்வி கேட்ட கர்விக்குத் தாகம் எடுத்தது. குறிப்பால் உணர்ந்த நீர்வீழ்ச்சி, என்னைக் குடி என்றது. அண்ணாவைக் குடித்தவன் தாகம் தணிக்கப் படுகிறான். அவனது களைப்பு தீர்க்கப்படுகிறது. கரைகளற்ற நீர்வீழ்ச்சி கறைகளற்ற நீர்வீழ்ச்சி! அது ஒரு நீர்த் தொங்கல் தண்ணீர் விழுதுகள்! இலத்திரை: விழும்போது அதற்கு அலைச் சுருக்கங்கள் இல்லை. மனிதன் விழுந்தால் எவ்வளவு சுருக்கங்கள் - முகத்தில்! அதோ நீர்வீழ்ச்சியின் பக்கம்- மந்தைகள் மேய்கின்றன: அந்தச் சின்ன ஆட்டுக் குட்டிக்குக் கத்தக் கூடத் தெரியவில்லை. பெரிய கடாவுக்கு அதனுடைய மழலை புரியவில்லை. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/30&oldid=863584" இலிருந்து மீள்விக்கப்பட்டது