பக்கம்:தமிழஞ்சலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி மனிதக் கூட்டத்தினிடையே நடந்து கொண்டிருக்கும் சண்டையில் - நான்கு பேர் புகுந்து அமைதியை நிலை நாட்டு வதைப் போல - மழையும்; ஒருகணம் அமைதியை நிலை நாட்டியது! மழைத் தோளால் நெய்யப்பட்ட பனித் திரையைக் கதிரவனுடைய கூரீட்டிகள் ஊடுருவின! அதன் விளைவு, வானவில் வண்ணங்காட்டி மேற்கில் சிரித்தது! போருக்குப் பின்னே எழும் அமைதி போல; வான மண்டலப் போருக்குப் பின், வில் மட்டும்தான் தனியே நின்றது! பயங்கரக் காட்டிலே வழி தவறி வந்துவிட்ட குழந்தை - எவற்றைப் பார்த்தாலும் தனது பிஞ்சு விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்து மிரள்வதைப்போல, வான வில்லும் நீண்ட நெடுவானத்திலே காட்சியளித்து, உலகைக் கண்டு மிரண்டு நின்றது! பசுமையான செடி கொடிகளையும், இதழ் விரித்த பூக்களின் அழகையும் பார்த்துச் சிரிக்கும் கள்ளங் கபடமற்ற குழவியைப் போல; வானவில்லும் உலகிலே நடைபெறும் மக்கட் கூட்டத்தின் திருவிளையாடல்களைக் கண்டு; தனது வண்ணத்தைக் காட்டிச் சிரித்தது! அந்த வில் அமைதிக்காக வளைந்ததா? மற்றொரு அம்பைக் காற்றிலே மிதக்கவிட வளைந்ததா? வினாக் குறியாக வில் விளங்கியது. இருப்பினும் வானவில் வானவில்தானே! 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/39&oldid=863593" இலிருந்து மீள்விக்கப்பட்டது