பக்கம்:தமிழஞ்சலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அந்த வளத்தின் வண்ணங்காட்டல்: இந்தப் பச்சை நிறமன்றோ! அந்நிலத்தின் சாயலினை அன்னவரின் அழகு தமிழ் உரையாடலிலே, தென்னகத்தின் வீதி தோறும், மன்றத்தின் முழுமை உள்ளங்கள் - இல்லங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் பார்க்காமல் வந்து விட்டாயா! அந்தக் குறைபாட்டில் அழகு பச்சையை நீ அழியும் மாயை என்று அறைந்தாயல்லவா என்றது? பச்சை! மேலும் விளக்கம் தேவையோ என்று பச்சை நிறம் பரிவோடு கேட்டது! ஆம், என்றான் அந்தத் தஞ்சாவூர் பொம்மை! அறிவுப் பசியால் அலைபவனல்லவா அவன். பச்சை மேலும் பேசிற்று! தம்பி, பாதை சரியாக இருக்குமானால், அந்தப் பாதையிலே போகின்ற வாகனங்களை, அறிவுறுத்தக் காட்டுகின்ற நிறம் கூட பச்சையல்லவா என்றது! அதுமட்டுமா? கற்களிலே மிகச் சிறந்த கல்லெனக் கூறுவது எது? மண்ணகம் வாழ்த்துவது - மக்களெலாம் போற்றுவது - எது? மரகதப் பச்சையன்றோ! அது பற்றிய விளக்கத்தைக் மேலும் கூறட்டுமா? கேள்! ★★女★ 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/51&oldid=863607" இலிருந்து மீள்விக்கப்பட்டது