பக்கம்:தமிழஞ்சலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மற்றொரு மலர், விடுவேனோ மாயை மனிதனே உன்னை - என்றது. மீண்டும் மாயைப் பற்றிய மயக்கமா என்று மிரண்டேன். எனது பெயர் என்ன தெரியுமா மனிதா என்றது. என்ன உன் பெயரென்று வெட்கம் தவழ்ந்த முகத்துடன் கேட்டேன். வேங்கைப் பூ என்றது. வேங்கைப் பூவா? என்றேன் திகைப்போடு. ஆம், வேங்கைப் பூதான் என்று கூறியது. ★女★★ வேங்கைப் பூ! என்ன தம்பி வேங்கைப் பூ என்றதும் வெல வெலத்துப் போய் விட்டாயா? வேங்கை என்ற வார்த் தை என்னோடு சேர்ந்திருப்பதால், நான் - புலி போலப் பாய்வேனோ? என்று அஞ்சுகிறாயா? என் பெயரைக் கேட்டதும் பின் ஏன், உன் உடலெ லாம் உதறுகிறது? அட மாயை மனிதா என் பெயரைக் கண்டே புத்தி பேதலித்து விட்டாயே. என் பெயர் வேங்கைப் பூதான். எனது வரலாறு தெரியுமா உனக்கு? 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/62&oldid=863619" இலிருந்து மீள்விக்கப்பட்டது