பக்கம்:தமிழஞ்சலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி சந்தன மரத்தின் மணவாழ்வைக் கூடத் தன் தண்தோளிலே பல்லக்கெனச் சுமந்துவரும். அந்த ஆறுகளுக்கு முகத்துவாரமெனும் சாவுகள் உண்டு. அதையும் துச்சமென மதித்து: மரணத்தை மஞ்சமாக ஏற்று காற்றைவிடக் கடுகி ஓடி வரும். அவை ஏன் அவ்வாறு ஓங்காரமிட்டும் ஒசையற்றும்; ஒடி ஆடி - பாடியும் - அன்னமென வருகின்றன. கதிர்களின் ஆனவ ஊடுருவல்கட்கு அடிமையாகி விட்ட பூமியைக் குளுமைப் படுத்தவே வருகின்றன. வெப்பமெனும் பகையை விரட்டுகிறேன் பார் என்று, வானமெனும் அடலேறு மழையாக முழக்கமிடுகிறான். அந்த வான் முழக்கத்தை ஏற்று, மலைச்சரிவுகளிலே கூடுகின்றன. கானகம் என்ற பகுதிகளிலே அவை பரந்து விரிந்து நதியாக உருப் பெறுகின்றன. ஆணவக் குரல் கொடுத்து, பூமியில் அண்டும் கதிர்ப் பகைவனுக்குள், எரியும் உயிர் விளக்கை: ஊதியணைப்பவை இந்த ஆறுகள்தாம். பொங்கும் வளத்தை அங்கே வலிவுபடுத்திட அவைப் பொலிவோடு பாய்கின்றன. அந்த அடவியிலே, மலைச்சரிவுகளிலேதான்; வேங்கைமரம். விளைகின்றன தம்பி; என்றது வேங்கை 鸟、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/64&oldid=863621" இலிருந்து மீள்விக்கப்பட்டது