பக்கம்:தமிழஞ்சலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அடேயப்பா, மரத்தின் கதையே இவ்வளவு சிறப்புப் பெற்றதா? மயக்கமாக இருக்கிறது பூவே உன் வரலாறு. அடடே! இதற்குள்ளாகவா மயக்கமடித்து விழப் பார்க்கிறாய்? இன்னும் கேள். அந்தக் காடுகளிலே, மலைச் சரிவுகளிலே எத்தனையோ எழிலான மர வகைகள் விளைகின்றன. அவைகட்குகெல்லாம் என் போன்ற அருமையோ பெருமையோ ஏற்பட்டு விடுமா? வெல்ல நினைத்து வேடிக்கைக் காட்டுகின்ற கழுகுக் கூட்டத்தின் கண்டத்தைக் கத்திரித்தால் எப்படியிருக்கும்? இதுபோல; எண்ணற்ற எழில் மரங்களிடையே நான்தான் மிகமிக உயரமாக - மிகமிகப் பருமனாகக் காட்சியளிப்பேன். எல்லா மரங்களையும் வென்று, வெற்றிக்கொடியை நாட்டி: விண்முட்ட விளங்கி நிற்பேன். எந்த மரமும் எனக்கு நிகராக இருக்க முடியாது - ஏன்? என் பெயர் வேங்கை மரமல்லவா? வேங்கை என் றால் - சாமான்யமான மிருகமா? வீரத்தின் விளக்கமல்லவா நான்? - அதனால்தான் தோற்றத்திலேயே மற்ற மரங்களை வீழ்த்துவேன். என்னருகே உள்ள மரங்களெல்லாம், கண்டம் கத்தரிக் கப்பட்ட கழுகுகளைப் போலக் காட்சியளிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/65&oldid=863622" இலிருந்து மீள்விக்கப்பட்டது