பக்கம்:தமிழஞ்சலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ான்.வி. கலைமணி வேங்கை மரத்தைப் போல நீண்டு வளர்ந்து, விண்முட்டும் வியப்போடு விளங்கும் திராவிடரியக்கத்தை தென்னவர் கோமான் அறிஞர் அண்ணா வளர்த்துள்ளார். வேங்கை வளரும் இடம் கானகமும், மலைச் சரிவுகளும்தானே! ஆனால், அண்ணாவின் தலைமையிலே துவங்கிய இயக்கம், வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றியது என்பதை மட்டும் மறந்துவிடாதே தம்பி! அவரது கட்சி ஒன்றுதானே "வேங்கையைப் போல வீரம் பொருந்தியப் பாசறையாக விளங்கியது! அந்தக் கட்சியின் வீரத் திருவுருவமாக - தன்னேரிலாத வழி காட்டியாக - அண்ணா காட்சியளித்தார்....! வேங்கை மரத்திலே காட்சிதரும் பூவைப் போல! பூ உதிர்ந்து, இதழ்களிழந்து, மடிந்து மண்ணோடு மண்ணாகி விடுமே என்று கருதுகிறாயா? மனித வாழ்க்கையின் தத்துவமே அது தானே! அதற்கு அண்ணா மட்டும் விதி விலக்காகிட முடியுமா? அல்லது அமிழ்தம் உண்டு விட்ட அமரர் குலமா அவர் இல்லையே! சாதாரண மனித இனம் தானே! எனவே, பிறப்பன இறப்பன உலகத்தின் பழக்க வழக்கங்களிலே, ஒன்றாகிவிட்டத் தத்துவம்! அதற்காக கவலைப்படாதே! ★次女★ 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/75&oldid=863644" இலிருந்து மீள்விக்கப்பட்டது