பக்கம்:தமிழஞ்சலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி மிருந்தன! மரகதப் பச்சை இலைகள் தழைத்திருந்தன! முப்பழக் கனிகள் கிளைகளில் பழுத்திருந்தன. சித்திரப் பூந்தோட்டத்து இரத்தின மலர்கள் தேனை வடித்து நின்று சிரித்தன! அந்த அழகுமிகு அற்புதச் சோலைக்குள் அவன் பொற் காலமெனப் புகுந்தான்! அவன் வருகையால் - அகமகிழ்ந்தனள் இயற்கை: மனக்கோலம் பூண்ட பாவையைப்போல களுக்கென்று சிரித்தது! சிரிப்புக்கள் அனைத்தும் தெறித்தோடி - கடலின் சிப்பிக்குள் முத்தாய் உறங்கின. அழகு புறப்பட்டு அறிவை வரவேற்றது! பழக நினைத்த ஞானம், அவர் பாதத்திலே விழுந்து பணிந்தது! அந்த மனிதன், கல்லாமையின் எதிரி! கயமையின் பகைவன் குணக்குன்றில் ஏற்றிய விளக்கு: என்றெண்ணி வணங்கத் தலைப்பட்ட வாரனங்கள் எத்தனை? முகிலின் தோரணங்கள் எத்தனை? ஒளியால் நிழல் தடுக்க மாட்டாத திங்கள், குடை பிடிக்க ஓடி வந்தான். இத்துணைச் சிறப்புக்கு உருவாகி - தெளிவாகி - பொருளாகி, மருள் நீக்கும் மருந்தாகி - அருளாகி, நிற்கின்றான் அந்த மாமேதை பல்லோர் போற்றும் அவனை, அவனி நல்லோனென 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/77&oldid=863647" இலிருந்து மீள்விக்கப்பட்டது