பக்கம்:தமிழஞ்சலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி மயிலின் இறகாக இருந்திருந்தால், புள்ளி நிறங் கொண்டு தென்றலுக்குக் கவரி வீசி மகிழ்ந்திருப்பேன்! கொக்கின் இறகாக என்னை ஆக்கி விட்டாயே! தாயே! அந்த கொக்கு ஒருநாள் வானத்தில் பறந்தது. அது எவ்வாறெலாம் போனதோ, அவ்வாறெலாம் அதனைத் தூக்கிக் கொண்டு நான் செல்ல வேண்டும். கொக்கு என்னைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டி வைக்க எண்ணுகிறது! அதற்கு நான் அடிமையா அம்மா? இறகில்லா விட்டால் - சிறகு இல்லை! சிறகு இல்லாவிட்டால் - கொக்கே இல்லையே! ஆயிரம் இறகாலானது சிறகு இரண்டு சிறகாலானது கொக்கு! சிறகைத்தான் கொக்கும் கவனிக்கிறது! இறகைப் பற்றி நினைப்பதே இல்லை. இறகு ஒன்று உதிர்ந்தாலும் பரவாயில்லை, என்று சிறகு நினைக்கிறது! உதிர்ந்த இறகோ, சகதியில் அழுகிறது! இறகு இருந்த இடத்தை, இன்னொன்று நிரப்ப முடியாதல்லவா? இறகுகள் இவ்வாறு உதிர்ந்தால், பிறகு கொக்கு பறக்க முடியாதல்லவா? கர்வம் கூடாது தாயே, கொக்குக்கு! 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/83&oldid=863662" இலிருந்து மீள்விக்கப்பட்டது