பக்கம்:தமிழஞ்சலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அதோ ஒரு கல் தொலைவில், வாழ்க்கையின் வடிவத்தைச் சரியாகக் காணமுடியாதவர்கள் - மரண வேக்காட்டில் நொந்து போனவர்கள் - உடலங்களைச் சுடுகாட்டுத் தீப்பிழம்பு சாம்பலாக்கிக் கொண்டிருந்தது! ஒய்ந்துபோன ஜீவன், வன்னிக் கொடிக்குத் தன்னுடைய கூட்டை இரையாக்கி - அது எரிகின்ற விதத்தைக், கலையுணர்ச்சியோடு கண்டுகொண்டிருந்தது. மேலே நிர்மலமான வானம், அதனைத் தாவிப் பிடித்துக் கொண்டிருந்தது - இறந்தவனின் ஆசைப் புகை: மனிதனுடைய பிறப்பைப் பற்றி மகிழ்ச்சிக் கொள்ளு கின்ற இந்த உலகம் - அவன் இறந்த பிறகு ஏன் மெள னம் சாதிக்கிறதென்று தத்துவங்களைக் கேட்டால், அது தனக்குரிய விக்ரகங்களைக் காட்டுகிறது. என்னுடைய சிந்தனை வளையங்கள், இந்த சூழ்நிலைக்கிடையில், மிக அமைதியான நிலையில் சுற் றிக் கொண்டிருந்தன. ஆனால், அதிலுள்ள ஓர் அழுத்தமான வளையம் மட்டும், வானை நோக்கி அறுந்து போகின்ற பட்டத்தைப் போல - வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. இப்போது - இரண்டு மேகக் குவியல்கள், எதிரும் புதிருமாகத் தெற்கிலிருந்தும் -வடக்கிலிருந்தும், குவிந்து கொண்டிருக்கின்றன. அதோ, அவை ஒன்றை ஒன்று கவ்விக் கொள்கின்றன. 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/90&oldid=863678" இலிருந்து மீள்விக்கப்பட்டது