பக்கம்:தமிழஞ்சலி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி தப்பித்துப்போன எனது சிந்தனை வளையம், அவை பிணைப்பை வெட்டி வீழ்த்திக் கொண்டே, மேல் நோக்கிச் செல்கின்றது. இப்போது என் எண்ணம், மேகத்தைத் தாண்டி - பூமியின் ஈர்ப்புப் பிரதேசத்தைத் தாண்டி - இறகுகூட நகர முடியாத காற்றில்லா பகுதியைத் தாண்டி - கோள் மண்டலத்தைத் தாண்டிச், சென்ற வண்ணமாகவே இருக்கின்றது. அந்த வான் வெளியில், நெஞ்சத்தி லிருந்து கீழ்நோக்கி ஏதோ ஒன்று வருவதுபோல் நான் உணர்கிறேன். அந்த உருவத்தின் முழுமையும் எனக்குத் தென்படா விட்டாலும் - ஒரு வெண்மையானப் புள்ளி, நிலப்பரப்பை நோக்கி வருவதை என்னால் உணர முடிகிறது. நான் இருக்கின்ற பிரதேசத்தில் மின்னல் இல்லை - விண்மீன்களது ஒளியில்லை - எங்கும் இருள் மயம்! இப்போது நிலம் நோக்கி வருகின்ற உருவத்திற்கு நீண்டு விரித்த சிறகுகள் இருந்தன. அதனுடைய இறக்கைகள், பகுத்தறிந்த அறிஞன் ஒருவன் வாழ்க்கையில், வாழயியலாத மக்களுக்கு அறிவுரைக் கூறிவிட்டு வாழ்த்தும்போது இருக்கின்ற கை அசைவைப் போல் அதனுடைய இறக்கைகள் மென்மையாக ஆடிக் கொண்டிருந்தன. அந்தப் பறவை, வான சாம்ராச்சியத்தின் துாதுவனா கவே இருந்தது! 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/91&oldid=863680" இலிருந்து மீள்விக்கப்பட்டது