பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பேச்சுடன் பேச்சு மேலும் பேசிட வேண்டா மாயின், கூச்சிடு கின்ற கொவ்வைக் குவியிதழ் மதுவைக் கொஞ்சப் பூச்சிடும் படியாய் வைத்துப் புலனுறு மாருப்க் கட்டி மூச்சுடன் முகர மூச்சு முத்தமொன் றளிநீ" யென்ருன். தாங்கிக்கொண் டிருந்த பெண்மைத் தனமெனும் கன்னித் தாட்பாள், நீங்கிக்கொண் டதனுல், நீலா நெகிழ்ச்சியுற் றெதிரில் நின்றே, "ஏங்கிக்கொண் டிருந்தேன், முத்தப் எனக்குநீர் முதலில் தந்து வாங்கிக்கொள் ளுங்கள் பின்பு வட்டியும் முதலா" யென்ருள். போதலர் போது! போந்த பொன்வண்டு புகுந்து, போது மீதலர் மதுவுட் கொண்டு மெல்லிசை பயிலும் போது! காதலர் காதல் வெற்றிக் களிநடம் புரியும் போதிவ் வோதுலர் கவிஞ னெப்பொன் றுரைத்திடும் போதெப் போது!!