பக்கம்:தமிழன் இதயம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் :

நானோ சண்டாளன்! சண்டாளன் என்று விலக்கப்பட்டவனின் கேள்வி நானோ சண்டாளன்!- சரி தானோ உங்களுக்கு? சரணங்கள் தாயை யிகழ்ந்தவன் சண்டாளன் தந்தையை நொந்தவன் சண்டாளன் தூயவர் நல்லோர் பெரியோரைத் தோஷ முரைத்தவன் சண்டாளன் தீயவை செய்தே பலர் ஏசத் தின்றுழல் கின்றவன் சண்டாளன் ஏவின செய்வேன் குற்றமிலேன் எளியவ னானேன் என்பதற்கே (நானோ) வீட்டை மறந்தவன் சண்டாளன் வேசியர்க் கலைபவன் சண்டாளன் நாட்டைக் காட்டிக் கொடுத்ததனால் லாப மடைந்தவன் சண்டாளன் பாட்டைத் தனிவழி வந்தோரைப் பதுங்கி யடிப்பவன் சண்டாளன் ஓட்டைக் குடிசையில் வாழ்கின்றேன் ஒருசிறு பாபமும் அறியாத (நானோ ) 114)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/115&oldid=1449917" இலிருந்து மீள்விக்கப்பட்டது