பக்கம்:தமிழன் இதயம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் சுகாதாரக் கும்மி கும்மியடிப்பெண்கள் கும்மியடி குல தெய்வத்தைக் கும்பிட்டடியுங்கடி நம்முடை தேசத்தில் நோய்களில்லாமலே நாடு செழித்திட வேணுமென்று. செத்தவர் தம்மை எழுப்பித்தரவல்ல சித்தரிருந்த திருநாட்டில் எத்தனையெத்தனை நோய்களினால் மக்கள் ஈசலைப்போல மடிவதென்ன! ஈசனளித்த அறிவிருந்தும் நல்ல இயற்கை விதிகளை விட்டுவிட்டு மோசமிகுந்தப் பகட்டுடை வாழ்க்கையில் மோகம்வைத்தே இந்த மோசமுற்றோம். சுத்த உணவிலும் சுத்த உடையிலும் சொன்னவிதிகளை விட்டுவிட்டோம் நித்தங்குளிப்பதும் பத்தியங்காப்பதும் மெத்தக் குறைந்தது தேசத்திலே. காலையிலெழுந்து நீராடல் கொஞ்சம் கர்த்தனை யெண்ணித் துதிபாடல் மாலையிலோடி விளையாடல் இந்த மார்க்கத்தைவிட்டனர் மக்களெல்லாம் 176)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/177&oldid=1449905" இலிருந்து மீள்விக்கப்பட்டது