பக்கம்:தமிழன் இதயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் : சமரச சன்மார்க்கம் எல்லா மதித்தினரும் கூடுவோமே ஏகம் கடவுளென்று பாடுவோமே நல்லார் உலகிலெங்கும் சொன்னது ஒன்றே ராமகிருஷ்ணர் வாழ்க்கையினால் கண்டோம் இன்றே. இற்றைக்கு நூறாண்டு முன்னம் ஒருநாள் இங்காட்டின் தெய்வீகத் தன்மைக ளெல்லாம் புத்தம் புது உருவில் தேவையறிந்தே போந்ததெனடராமகிருஷ்ண தேவர் பிறந்தார். பள்ளிப் படிப்பெதுவும் இல்லாமலும் பாடம் வேறொருவர் சொல்லாமலும் வெள்ளம் பலநிறைந்த கடலேபோல் வெவ்வேறு மதங்களுக் கிடமானார். தானே நினைத்தறியும் படிப்பன்றோ தன்னைத் தேற்றுவிக்க முடிப்பாகும் ஊனோ டுயிர்கலந்த ஒழுக்கமன்றோ உண்மை ராமகிருஷ்ணர் வழக்கமெல்லாம். ஏட்டுப் படிப்பை மட்டும் கற்றோமே ஏழைக் கிரங்கு மன்பைப் பெற்றோமா? நாட்டில் நலிந்தவர்க்காய் அழுதுருகும் ராமகிருஷ்ணர் தம்கருணை தொழுதிடுவோம். 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/28&oldid=1448521" இலிருந்து மீள்விக்கப்பட்டது