பக்கம்:தமிழன் இதயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் நிலை யிழந்து பரிதவிக்கும் நீபிறந்த இந்நாட்டின் நிலைமை நோக்கி, நீபட்ட கொடுந்துயரம் இன்னொருவர் படுவரென நினைக்கப்போமோ, கலையிழந்த மதியானோம், கண்ணிழந்தமுகமெனவே கலங்கிநின்றோம், காரிழந்த பயிரெனவே சோறிழந்த வயிறெனவே சோர்ந்துவிட்டோம், தலையிழந்த உடலமெனத் தவிக்கின்றோம் இது உனக்குத் தருமந் தானோ, தஞ்சமென முன்னின்று தைரியத்தோடுழைக்கு முக் சப்தமோயா (தன் அலையிழந்த கடலேபோல் ஆட்டி ழந்த பம்பரம்போல் அடங்கி வீழ்ந்தோம், ஆரினிமேல் எங்களுக்கு அன்னை யென முகந்துடைத்து அறிவு சொல்வார்! - இருப்பாய்நீ சிறைவாசம் இருமூன்றுவருஷமென இசைந்து கூறி இதுபோதா துந்தனுக்கு மிகக்குறைத்தே னென்ற, உந்தன் சிறப்பறியப் போதாத தேவாரென் றொருஜட்ஜு செப்புங் காலை, சிரித்தமுகம் கோணாமல் சினத்த அகம் காட்டானாகி "மறுப்பதுண்டு, குற்றமில்லேன், பாகிதலத்தை ஆளுகின்ற சக்திவேறே மறைந்திருந்து நானடையும் கஷ்டத்தின் மர்மமாக 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/50&oldid=1449901" இலிருந்து மீள்விக்கப்பட்டது