பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 27 மூவரசர்கள் வாழ்ந்த நாட்களிலும், அதற்கு முன்பும் தியாகய்யர், சாஸ்திரி, தீட்சிதர் கிருதிகள் பாடவில்லை. இசையே இல்லையோ? உண்டு! தமிழ் இசை பாடப்பட்டது. அந்த இசை இன்று எங்கே? பொன்னும் மணியும் பொலிவுடன் விளங்க, வீரமும் ஈரமுங்கொண்டு ஆண்ட தமிழ் மன்னர்கள் மற்றைச் செல்வங்களை வளர்த்ததுபோல், கலைச் செல்வத்தையும் வளர்த்தே வந்தனர். தமிழகத்துச் சந்தனம் ரோம் சாம்ராஜ்யத்தில் வாடை வீசியதுபோல, தமிழ்க் கலையின் மணம் எங்கும் பரவி இன்பம் ஊட்டிற்று. எங்கே அந்தக் கலை இன்று? சேர நன்னாட்டின் மங்கையர், வேழத்தை விரட்டிய தமது வீரக் காதலரை வாழ்த்திப் பாடியது தமிழில்தான். வெற்றிக்கொடி பறக்க எதிரியை விரட்டி அடித்துத் திரும்பிய சோழ மன்னர்கள் சிறப்பைத் தமிழில்தான் பாடினார்கள். பாண்டியனின் குமரிகளுக்குப் பாங்கிகள் பாடியது தமிழ்ப் பாட்டுக்கள்தான். எங்கே அந்தத் தமிழ்ப் பாட்டுக்கள்? கதிரவன் காய்வதை அடக்கிக்கொண்டு மேனி சிவந்து மறையும் நேரத்தில் கடலோரத்தில் பட்டுக் கூடாரத்தினுள்ளே பக்கத்தில் இருந்த கோவலனின் உள்ளம் குழைய மாதவி பாடியது, "மாரு பல்கா. கொன்னாவே ஏமிரா” வுமல்ல; "சல்சல்ரே நவ்ஜவானுமல்ல! தமிழ்! இன்று, தமிழ் இசை போதுமான அளவு இல்லை என்று கூறும் நிலை வந்தது. காரணம் என்ன? இழந்த இன்பம் தமிழர் இசையை வளர்த்ததுபோல், வேறு இனத்தினர் வளர்க்கவுமில்லை; தமிழர் இசையை இழந்தது போல்