பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

"முற்றிய திருவின் மூவராயினும்
பெட்பின்றீதல் யாம் வேண்டலமே
விறல்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாள் உளம் தபுத்த வாள்மிகு தானை
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புகைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ! நோயிலை ஆகுக!"
ஆர்கலி யாணர்த் தரீ இய கால்வீழ்த்துக்
கடல்வயின் குழீஇய அண்ணலம் கொண்மூ
நீரின்று பெராய வாங்குத் தேரொடு
ஒளிறுமருப் பேந்திய செம்மல்
களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே.