பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழர் தோற்றமும் பரவலும்


இடங்களில் காணப்பட்ட மட்பாண்டங்களில் மீதுள்ள பெரிய எழுத்துக்களாம். இந்தக் காலகட்டம், திராவிடர் தெற்கு நோக்கிக் குடிபெயரத் தொடங்கி, அங்கேயே நிலைத்த குடியினராகி விட்ட காலமாகக் கருதப்பட்டது. இம்முடிவு, தொடக்க நிலை இரும்புக்காலத்துச் செழிப்பான பின்னணிகளைக் கூறத் தேவையில்லை. பழங்கற்கால, புதிய கற்காலத்து மனிதனின் மரபு வழி வாழ்வில் வேரூன்றி நிற்கும், தென்னிந்திய நாகரீகத்தின் அடிப்படையையே புறக்கணித்து விடுவதாகும் சில முடிவுகள், துரதிர்ஷ்டவசமாகக் கருத்தாழம் மிக்க நுண்ணிய சிந்தனை ஏதும் செலுத்தப்படாமலே, வழிவழி வந்த ஆராய்ச்சிப் பேராசிரியர்களாலும் அதையே ஒப்பிக்கும் மாணவர்களாலும், உறுதிப்படுத்தப்படுகின்றன. இதற்குப் பொருந்தும் எடுத்துக்காட்டு புத்தமதம். ஒரு மதமாம் நிலையை முழுமையாக அடைந்துவிட்டது என்பதை நாம் புத்தன் எனக் கூறுவதாகும். இது போகிற போக்கில் கூறியதுதான். நான் காட்ட விரும்பியது என்னவென்றால், மரபினைக் காலம் தோற்றுவிக்கிறது; திராவிட இனம் மத்தியதரைக் கடல் நாகரீகத்தைச் சேர்ந்தது என்ற கொள்கை இன்றுவரை, மறுக்கப்படாமலே, இருப்பதால், அது பெரும்பாலும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகிவிட்டது என்பனவே. அக்கருத்தை மறுக்க வேண்டிய கடும் பொறுப்பு என்மேல் வீழ்ந்துள்ளது.

திராவிடர்களின் தென்னிந்தியக் குடிபெயர்ச்சியை ஒப்புக்கொள்பவர்களும் கூட, இந்நாகரீகத்தின் அடிப்படையில் ஓர் ஒருமைப்பாடு இடங்கொண்டிருக்கும் உண்மையிலிருந்து தப்பிக்க முடியாது. ஏனைய பிறவற்றினும் மேலாக, மட்பாண்டம். பிணம் புதைக்கும் முறை என்ற இரண்டு பொருள்களில் ஒருமைப்பாடு நன்கு பிரதிபலிக்கிறது. இவ்வுண்மைகளை எவ்வளவு சுருக்கமாக முடியுமோ, அவ்வளவு சுருக்கமாக உங்கள் முன் வைக்குமாறு உங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த உரிமையை