பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் நாட்டுப் பாடல்கள் o 3 4 எனக்குண்ணு இருக்கானே எண்ணங் கெட்ட பாவி மகன் புல்லு அறுக்கையிலே புளியம் பூவும் கொண்டு போனேன் புளியம் பூ வாட தட்டி-நான் புல்லறுப்ப மறந்து விட்டேன் வாய்க்கா வரப்பு சாமி! வயக்காட்டு பொன்னு சாமி! களை எடுக்கும் பொம்பளைக்கு காவலுக்கு வந்தவனே! சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா விளாத்திகுளம், நெல்லை மாவட்டம். எதிர்ப் பாட்டு ஆத்தாள் அறியாமல் தன்னுடன் வந்து விடும்படி கூறுகிறான் காதலன். அவள் அவனுக்கு பதில் சொல்கிறாள். அதன்படி அவனால் செய்ய முடியுமா? இவ்வாறே பாட்டும் எதிர்ப்பாட்டுமாக உரையாடல் சொல்லுகிறது. ஆண் : அஞ்சு ரூபா தாரேன் அரக்கு போட்ட சேலை தாரேன்-உன் ஆத்தாள் அறியாம நீ வாக்கப்பட்டு வந்திரடி பெண் அஞ்சு ரூபா வேண்டாம் அரக்குபட்டு சேலை வேண்டாம் தட்டான் அறியாம-நீ தாலி பண்ணி வந்திரடா ஆண் : தட்டான் அறியாம தாலி பண்ணி நானும் வந்தா அடுப்பங் கட்டு இல்லாமல்-நீ பருப்புச் சோறு பொங்கி வாடி பெண் : அடுப்பங்கட்டி மூணில்லாம பருப்புச் சோறு பொங்கி வந்தா