பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 பெண்:” ஆண் : பெண்: ஆண் : பெண்: ஆண் : பெண்: தமிழர் நாட்டுப் பாடல்கள் கொஞ்சி விளையாடி உனக்கு குழந்தை கையிப் புள்ள தாரேன் காடைக் கண்ணி மாவிடிச்சு கருப்பட்டியும் சேர்த்திடிச்ச தின்னு ருசி கண்டவரே தின்னக் கூலி கட்டிடுவேன் ஆத்துல கடலைச் செடி அதுல ரெண்டு செவலக் காளை செவலக் காளை விலை பெறுமோ குமரிப் புள்ள கைவிளைவி? குத்துக்கல்லு மேலிருந்து குறும்பு பேசும் மச்சானே அத்தை மகன் முறையாலே அடக்கிக் கொண்டேன் மையலிலே கண்டப் பழமே-நீயே! சுங்கொடிச் சேலைக்காரி கண்டு என்னப் பாராமல் சூதமாகிப் போனாயடி மச்சானே மன்னவரே மனசிலயும் எண்ணாதிங்க சூதமாகிப் போறாமிண்ணு சூசகமாச் சொல்லாதிங்க ஆத்தோரம் நாணலடி அதன் நடுவே செய்வரப்பு செய்வரப்புப் பாதையிலே தேவாமிர்தம் உண்கலாமோ? முத்துப்பல்லு ஆணழகா! மெத்த மையல் கொண்டவரே! ஆத்தில் தலைமுழுகி-உங்க ஆத்திரத்தை நான் தீர்ப்பேன். வட்டார வழக்கு : சூதமாகி-கள்ளத்தனமாய். சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.