பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143 தமிழர் நாட்டுப் பாடல்கள் திருச்செந்தூர் பாலம் காதல் உறவில் ஊடலும் கூடலும் நிகழும். அவைதான் உறவை இறுக்கமாகப் பிணிக்கும். காதலனும் காதலியும் பிணங்கிப் பின் கூடுவதை இவ்வுரையாடல் காட்டுகிறது. பெண்: ஆண்: சேகரித்தவர்: திருச்செந்தூர் ஓரத்திலே விரிச்சதலைப் பாலத்திலே விரும்பிச் சொன்ன சத்தியங்கள் வீணாகப் போனதய்யா அஞ்சு மணி நேரத்திலே ஆறு கண்ணுப் ப்ாலத்திலே குளுந்த மணலுல நாம் கூடுறது எந்த விதம்? முக்கட்டுக் கல்லுலயே மூணு விதப் பச்சக் கல்லு நானெடுத்த பச்சக் கல்லு யாரெடுத்துக் கொஞ்சினாக? அஞ்சுகிளி ரஞ்சிதமே அனேககிளி சினேகிதமே கொஞ்சும் கிளி ரத்தினத்தை-நான் குத்தப்பட என்ன சொன்னேன்? இடை வழிக் கெட்டி ஏழுகுளம் தலைமுழுகி கொண்டாடி தலை முடியை கொடங்கையில் போட்டுறங்க. இடம்: S.S. போத்தையா விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம். பழகினவள் எங்கே போவாள் இரு காதலர்களுக்கு அண்மையில் மணம் நடக்கவிருக்கிறது. அதுவரை, தன்னைச் சுற்றிச் சுற்றி வர வேண்டாமென்றும், தனது குறும்புகளை நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும், நடை உடைகளை மாற்றிக் கொள்ளுமாறும், அவனிடம் அவள் கூறுகிறாள்.