பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 207

             காதல் 

வேண்டியவைகளை எல்லாம் பாட்டில் சொல்கிறாள். இன்னும் காத்துக் கொண்டிருந்தால், மண உறவு முறிந்து பகையாகிவிடும் என்று எச்சரிக்கிறாள்.

   ஈக்கிக் கம்பி வேட்டியில 
   ஏலரிசிமுடிஞ்சிவிட்டேன் 
   தின்னாமப் போராரே 
   திண்டுக்கல்லு வாய்தாவுக்கு 
   
   திண்டுக்கல்லாம் சங்கதியாம் 
   தேசங் கோட்டு வாயிதாவாம்; 
   வாய்தாவை தீத்துப் போட்டு 
   வந்திருவார் இந்த வழி 
 
   வந்திருவார் இந்த வழி 
   வாச்சிருவார் தங்க குணம் 
   தந்திருவார் வெத்திலைய 
   போட்டிருவேன் வாய் செவக்க 
   வருவாரு போவா ருண்ணு 
   வழியெல்லாம் கிளி யெழுதி 
   இன்னும் வரக் காணலியே-இந்த 
   இண்டழிஞ்ச பாதையிலே
   
   கல்லுரலு காத்திருக்க 
   கருத்தக் கொண்டை செவத்தசாமி!  
   ஏனையா காத்திருக்கே 
   எல்லாம் பகையாக?
   வட்டார வழக்கு : கிளியெழுதி-கிளிப்படம் போட்டு, இது காதலுக்கு அடையாளம்; ஏலரிசி-வரகரிசி; வாச்சிடுவார்-வாய்த்திடுவார்.

குறிப்பு : வாய் செவக்க-ஒருவன் கொடுத்த வெற்றி லையை ஒரு பெண் போட்டுக் கொள்வது இணக்கத்தை குறிக்கும். அதை மென்று தின்னும்போது அவள் வாய் சிவந்தால் கொடுத்தவனுடைய அன்பு மாறாது என்பது நம்பிக்கை.

   இண்டழிஞ்ச - முட் செடிகள் அழிந்து முள் சிதறி கிடக்கிற பாதை.


   சேகரித்தவர்:           இடம்: S.M. கார்க்கி               சிவகிரி.