பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
242

தமிழர் நாட்டுப் பாடல்கள்


வட்டார வழக்கு: ஊடாலே-நடுவில்; புளி-புளிய மரம்; ஒண்டு-ஒன்று.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. gregGeigy
தூத்துக்குடி வட்டாரம்

பயல்களைப் பார்ப்பாளாம்!

சிற்றுார்களில் கூட உழைத்துப் பிழைக்காமல் வேசித் தொழில் செய்து இழிவான வாழ்க்கை வாழும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து வள்ளுவர் முதல் பல நீதி நூலாசிரியர்கள் போதனை செய்து வந்திருக்கிறார்கள். ஆயினும் சமூக நிலைமைகள் காரணமாக, அவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய வேசி ஒருத்தியின் வலையில் அகப்பட்டு அவள் மீது மோகங்கொண்டு திரிகிறான் ஒரு வாலிபன். அவனைத் திருத்துவதற்காக உழைத்து நல் வாழ்க்கை வாழ ஆசைப்படும் பெண்கள் அவளது வாழ்க்கையின் இழிவைப் புலப்படுத்திப் பாடுகிறார்கள்.

ஆசை விசுவாசம்
அந்தப் புள்ளே பூவாசம்
என்ன விசுவாசமோ
இனி மறக்கக் கூடுதில்லை
குறு குறு வென்று பாராதடி குறுஞ்சிரிப்பு சிரியாதடி
உன் குறு குறுப்பும் குறுஞ்சிரிப்பும்
என் குடியைக் கெடுக்குதடி
கருத்த கருத்தப் புள்ள
கண்ணுக்குள்ளே சுழட்ட
மாறிச் சுழட்டாதடி
மாயப்பொடி போடாதடி
காத்தடிச்சு தாழை பூத்து
காத வழி பூ மணக்க
எருக்கலம்பு வாடை தட்டி-நீ தெருக்கடந்து போகலாமோ? தட்டக்காட்டு விட்டிப் போல சாலைக்காட்டு மந்தி போல வேலைக்காட்டு குன்னாய் போல
விலகி நல்லாப் போறானடி