பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 தமிழர் நாட்டுப் பாடல்கள் மனைவி சற்று தூரத்தில் தெரு மறைவில் வந்து கொண்டிருக்கி றாள். பழைய காதலிக்கும் இவனுக்கும் பின்வரும் உரையாடல் நிகழ்கிறது. காதலி: ஆத்தோரம் நாணலடா அதுக்கடுத்துச் செய்வரப்பு செய்வரப்புப்பாக்க வந்த நீ தேனமிர்தம் உண்கலையோ? அவன்: நல்ல நல்ல துயிலுடுத்தி நல் துயிலு மேலணைஞ்சு குஞ்சரமே புள்ளை தூக்கி குயிலாளும் வாராளடி காதலி: என்னிலேயும் நல்லவளோ இடையும் சிறுத்தவளோ கைக்கு அணைவாயிருந்தா போயிவாங்க மன்னவரே அவன்: பருவம் பருவம் தாண்டி பலாக்கா நெல்லுடையாள் புருவத்து அழகுடையாள் போயி வரக் கட்டாதடி வட்டார வழக்கு: துயில்-துகில்; செய்-வயல், பலாக்கா-பலாக்காய் (தோட்டம் வயல் உடையவள்). சேகரித்தவர்: இடம்: 8.M. கார்க்கி நெல்லை மாவட்டம். சைக்கிள் ஓட்டும் சாமி சைக்கிளில் வேகமாகச் செல்கிறான். சில நாட்களாக அவனைப் பார்க்க முடியாத காதலி, அவனைப் பார்த்து விடுகிறாள். அவன் சைக்கிளிலிருந்து இறங்குகிறான். அவள் அவனை நோக்கி தன்னை மறக்கவில்லையென்று சத்தியம் செய்ய வேண்டுகிறாள். அவனும் அப்படியே சத்தியம் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லுகிறான். அவள் வேட்டி தாண்டி சத்தியம் செய்யச் சொல்லுகிறாள். அவனோ மீனாட்சி கோவிலில் வேட்டி தாண்டி சத்தியம் செய்து தருவதாக சொல்லுகிறான்.